வியாழன், 11 ஆகஸ்ட், 2016

"There is no meaning, getting political independence without social independence"
இப்படித்தான் இந்தியத்தின் விடுதலையை எதிர்த்தனர் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்கள். ஆனால் அந்தத் தலைவர்கள்
தேசவிரோதிகளாக அடையாளம் காட்டப்படுகின்றனர் இன்றைய ஆதிக்கச் சாதியினரால். முதல் வட்ட மேசை மாநாட்டில்
கலந்துகண்ட தாத்தா "ராவ்பகதூர்" இரட்டைமலை சீனிவாசன் அவர்கள், பிரித்தானிய அரசரின் கைகுலுக்கச்சென்று சட்டென தனது
கையை பின்னுக்கு இழுத்துக்கொண்டார். வியப்பும், அவமானமும் ஒருசேர "ஏன் உங்கள் கையைப் பின்னுக்கு
இழுத்துக்கொண்டீர்" என பிரித்தானிய அரசர் கேட்க "If I touch and shake your hands, you may be polluted"  என்று தாத்தா
விடையிறுத்தார். "அதெப்படி? நீங்கள் தொட்டால் நான் எப்படி தீட்டாவேன்"? என்று கூற தாத்தா, இப்படித்தான் எங்களை இந்தியத்தில்
நடத்துகின்றனர் என்று கூறினார். அப்படியானால் உங்களில் ஒருவர் அடிபட்டு சாலையில் கிடந்தால் யாரும் காப்பாற்ற மாட்டார்களா?
என்று கேட்டார். உறுதியாக இல்லை என்று தாத்தா கூறினார். அப்போதுதான் பிரித்தானிய அரசர் காந்தியைத் தொடர்புகொண்டு முதலில்
இந்த சமூகப் பிரச்சினையை தீர்க்கப்பாருங்கள் என்று உறுதிபடக் கூறினார். இதன் பின்னர்தான் காந்தி ஒடுக்கப்பட்டுத் தாழ்த்தப்பட்ட
மக்களுக்கு "ஹரிஜன்" என்று பெயர் வைத்தார். நாமெல்லாரும் ஒன்று என்று சப்பைக்கட்டு கட்டினார். அரசியல் சுதந்திரம் பெறப்பட்டது.
ஆனால் சமூக சுதந்திரம் பெறப்பட்டதா...? இன்றுவரை சேரிகளும், இரட்டைக்குவளை முறையும், தனிச் சுடுகாடு முறையும், பொதுவழியில்
ஒடுக்கப்பட்ட மக்கள் போக மறுப்பதும், ஒடுக்கப்பட்டமக்கள் உயர்கல்வி பெறுவதைத் தடுப்பதும், இதை எதிர்த்து கருத்துக்கூறும்
அறிஞர்களைக் கொலை செய்வதும் மலிந்துவிட்ட இந்நாட்டிற்கு சுதந்திரம் ஒரு கேடா....?

வியாழன், 16 ஜூன், 2016

<iframe SRC='http://live.mylivefootball.com' width='600' height='400' id=www.Newtvworld.com marginwidth=0 marginheight=0 hspace=0 vspace=0 frameborder=0 scrolling='no'></iframe>

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

https://www.facebook.com/photo.php?fbid=381334505225913&set=a.100662356626464.1323.100000481002125&type=3&theater
விழியோடும், வழியோடும் கொள்ளையடித்த கும்பலைக் கூட்டத்தோடு விரட்டிட இந்தக் கூட்டணி மிகவும் அவசியமானது...எனது தனிப்பட்ட கருத்து...யார் வரவேண்டும் என்பதல்ல....யார் வரக்கூடாது என்பதில்தான் தமிழக மக்கள் கவனமாக இருக்க வேண்டும், சாதியத்தாலும், மதத்தாலும், இலவசங்களாலும் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிக்காரர்களான அஇஅதிமுக, திமுக, தமிழர்களை இந்தியர்களாக மட்டுமல்ல, மனிதர்களாகக்கூட மதிக்காத காங்கிரஸ், பாமக போன்ற கட்சிகள் வரவே கூடாது...சென்ற தேர்தலில் ஈழத்தமிழர்களைக் கொன்றுகுவிப்பதற்குக் காரணமாக இருந்த திமுகவும் காங்கிரசும் வரக்கூடாது என்பதற்காகவே ஒரு விபத்துப் போல அஇதிமுக விற்கு வாக்களித்தனர் மக்கள்...அதற்கான தண்டனையை செம்பரம்பாக்கம் வாயிலாக அனுபவித்தனர். ஆகவே தமிழக மக்கள் சிந்தித்துச் செயல்படவேண்டிய தருணம் இது. மீண்டும் அந்த நான்கு கட்சிகளைத் தேர்ந்தெடுத்தால் தமிழகத்தை எவராலும் காப்பாற்ற இயலாது...இந்நான்கு கட்சிகளுக்கு எதிரான அனைத்துக் கட்சிகளும், இயக்கங்களும் ஓரணியில் திரள வேண்டும்....தமிழகம் காப்பாற்றப்படவேண்டும் என்று ஒரு கர்நாடகத் தமிழன் அபுதாபியில் இருந்து துடிக்கிறேன்....

புதன், 18 நவம்பர், 2015

மூலிகை நீர் - இய‌ற்கை வைத்தியம்
ஆவாரம்பூ நீர்:
“ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்ட துண்டோ” என்ற பழமொழிக்கு ஏற்ப நீரிழிவுக்கு ஆவாரைப்பூவின் அற்புதத்தை அறியலாம். மஞ்சள் நிறமுள்ள இப்பூ தங்கச்சத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆவாரம்பூ சுவை நீர் நீரிழிவு, பெரும்பாடு, குடற்புண், நீர்க்கடுப்பு, வெள்ளைப்போக்கு ஆகியன வராமல் தடுக்கிறது. நூறு மில்லி நீரில் பத்து ஆவாரம் பூக்களை போட்டு காய்ச்சி, வடிகட்டி காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து தேவையெனில் காபித்தூள் அல்லது டீத்தூள் கஷாயத்தில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.
கரிசாலை நீர்:
சிறுநீரக செயலிழப்பு, அதிக இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், காச நோய், வெண்புள்ளி, எலும்பு தேய்மானம் ஆகியன வராமல் கரிசாலை சுவைநீர் தடுக்கிறது. மேற்சொன்ன ஆவாரம்பூ சுவை நீர் தயாரிப்பதுபோல் ஆவாரம்பூத் தூளுக்குப் பதிலாக கரிசாலைதூளை இரண்டு கிராம் போட்டுக் கொள்ளவும். தினசரி காலையில் மட்டும் கரிசாலைச்சுவை நீர் அருந்தி வரவும்.
செம்பருத்தி நீர்:
செம்பருத்தி பூ நீர் இதய சுவர் ஓட்டை, இதய வால்வு, தேய் மானம், வழுக்கை, இரத்த சோகை ஆகியன வராமல் தடுக்கிறது. இது மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது. குடல் இறக்கம், கர்ப்பப்பை இறக்கம் ஏற்படாதும் தடுக்கிறது.
காய்ச்சிய பாலை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து அதில் அடுக்கு செம்பருத்திப்பூ இதழ்கள் ஐந்து போட்டுப் பத்து நிமிடம் பாலை மூடி வைத்து பின் வடிகட்டி விட வும். பால் சிவப் பாகி இருக்கும். இனிப்பு சேர்த்து வடிகட்டி காலையிலும், மாலையிலும் குடிக்கவும். சளி தொந்தரவு உள்ளவர்கள் பால் காய்ச்சும் போது தோல் நீக்கிய சிறு துண்டு இஞ்சியை நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
நன்னாரி நீர்:
“தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால்” என்பதன் மூலம் நன்னாரியின் நற்பண்பை நவிலலாம். நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து உபயோகிக்கவும்.
துளசி நீர்:
குடல் காய்ச்சல், மஞ்சள் காமாலை, மலேரியா, காலரா நோய்கள் வராமல் துளசி சுவை நீர் தடுக்கும். மேலும் குடல்வால் அழற்சி ஏற்படாது. காய்ச் சிய நூறு மில்லி சூடான பாலில் இரண்டு கிராம் துளசி இலை பொடியைக் கலந்து, மூடி வைத்து பத்து நிமிடங்கள் சென்று இனிப்பு சேர்த்து,தேவை யெனில் காபி அல்லது டீ கஷாயம் சேர்த்து வடிகட்டி தினசரி காலையில் மட்டும் குடிக்கவும். அடிக்கடி பல ஊர்கள் தண்ணீர் குடிப்போரும், தொற்று நோய்கள் பரவும் காலங்களிலும் இந்த துளசி சுவை நீரை பயன்படுத்தி பலன் பெறலாம்.
வல்லாரை நீர்:
யானைக்கால், வலிப்பு, மலடு, பக்கவாதம், மூலம், மூட்டுவலி, இரத்தக்குழாய் தடிப்பு போன்ற நோய்கள் வராமல் வல்லாரை சுவை நீர் தடுக்கும். “காய சித்திக்கு புளியாரை„ கபால கோளாறுக்கு வல்லாரை” என்பார்கள். வல்லாரை இலைப்பொடி இரண்டு கிராம் எடுத்து மேற்கண்டுள்ள துளசி சுவை நீர் தயாரிப்பதுபோல் வல்லாரை சுவை நீர் தயாரித்துக் கொள்ளவும். காலை, மாலை இருவேளையும் குடிக்கவும். எல்லோருக்கும் என்றும் ஏற்றது வல்லாரை சுவை நீராகும். இச்சுவை நீர்கள் குறிப்பிட்டுள்ள நோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் கூடியது. எனவே நோயுள்ளோரும், பயன்படுத்தி பயன் பெறலாம்.