https://www.facebook.com/photo.php?fbid=381334505225913&set=a.100662356626464.1323.100000481002125&type=3&theater
ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016
விழியோடும், வழியோடும் கொள்ளையடித்த கும்பலைக் கூட்டத்தோடு விரட்டிட இந்தக் கூட்டணி மிகவும் அவசியமானது...எனது தனிப்பட்ட கருத்து...யார் வரவேண்டும் என்பதல்ல....யார் வரக்கூடாது என்பதில்தான் தமிழக மக்கள் கவனமாக இருக்க வேண்டும், சாதியத்தாலும், மதத்தாலும், இலவசங்களாலும் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிக்காரர்களான அஇஅதிமுக, திமுக, தமிழர்களை இந்தியர்களாக மட்டுமல்ல, மனிதர்களாகக்கூட மதிக்காத காங்கிரஸ், பாமக போன்ற கட்சிகள் வரவே கூடாது...சென்ற தேர்தலில் ஈழத்தமிழர்களைக் கொன்றுகுவிப்பதற்குக் காரணமாக இருந்த திமுகவும் காங்கிரசும் வரக்கூடாது என்பதற்காகவே ஒரு விபத்துப் போல அஇதிமுக விற்கு வாக்களித்தனர் மக்கள்...அதற்கான தண்டனையை செம்பரம்பாக்கம் வாயிலாக அனுபவித்தனர். ஆகவே தமிழக மக்கள் சிந்தித்துச் செயல்படவேண்டிய தருணம் இது. மீண்டும் அந்த நான்கு கட்சிகளைத் தேர்ந்தெடுத்தால் தமிழகத்தை எவராலும் காப்பாற்ற இயலாது...இந்நான்கு கட்சிகளுக்கு எதிரான அனைத்துக் கட்சிகளும், இயக்கங்களும் ஓரணியில் திரள வேண்டும்....தமிழகம் காப்பாற்றப்படவேண்டும் என்று ஒரு கர்நாடகத் தமிழன் அபுதாபியில் இருந்து துடிக்கிறேன்....
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)