செவ்வாய், 28 செப்டம்பர், 2010
ஞாயிறு, 26 செப்டம்பர், 2010
சனி, 25 செப்டம்பர், 2010
வெள்ளி, 24 செப்டம்பர், 2010
கோலார் தங்கவயல்.
கோலார் தங்கவயல்!! நான் பிறந்த மண். "மினி லண்டன்" என்று அழைக்கப்பட்ட கோலார் தங்கவயலில் கி.பி.இரண்டாம் நூற்றாண்டிலேயே தங்கம் கிடைத்ததாக வரலாறு கூறுகிறது. "கர்நாடக புலி" என்று அழைக்கப்படும் திப்புசுல்தான், தங்கவயலில் தங்கம் எடுத்ததாகக் கூறப்படுகிறது.
சாம்பியன் ரீப் மைன்ஸ் 1885 -ம் ஆண்டில், ஜான் டைலர் & கம்பெனி யால் தங்கவயலில் சுரங்கம் தோண்டும் பணி தொடங்கப் பட்டது. சுரங்கப் பணிக்காக பணியாளர்களை, தமிழ்நாட்டின் வட ஆர்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர்களை பெருமளவில் அழைத்து வந்தனர். அதாவது 90 விழுக்காடு தமிழர்களே.! அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே!!
துவக்ககாலத்தில் சுரங்கத்த் தொழிலாளர்கள் பட்ட துன்பங்கள் சொல்லவொண்ணாது. வாரத்தில் திங்களன்று சுரங்கத்துள் இறங்கினால், சனிக்கிழமை மாலைதான் வெளியில் வருவார்கள். அதற்கு ஒரு பழமொழியும் சொல்வார்கள். உள்ளே போனால் பிணம். வெளியே வந்தால் பணம்" என்று. அது முழுக்க முழுக்க உண்மையே.
தங்கத்தை எடுப்பதற்காக, பாறையில் துளையிட்டு, வெடிமருந்தை நிரப்பி, வெடிக்க வைப்பார்கள். அப்போதெல்லாம் வெடிமருந்து பூசப்பட்ட சணல் கயிறுதான் திரியாக பயன்படுத்தப்பட்டது. திரியை கொளுத்திவிட்டு உடனே தூரத்துக்கு செல்லவேண்டும்.ஆனால் சுரங்கத்துக்குள் அப்படியெல்லாம் உடனே வேறிடத்துக்கு மாறி சென்றுவிடமுடியாது. வெடிப்பதற்குள் வேறிடம் செல்லவில்லை என்றால், அவர்களும் வெடியில் சிக்கி உயிரழக்க வேண்டியதுதான்.
வெடி வைத்து முடிந்த பின்னால் , பாறைகளின் இடுக்கில் காற்று புகுந்து கொண்டுவிடும். அது வெப்பமடைந்து, ஒரு கட்டத்தில் வெடித்துச் சிதறிவிடும். அந்த நேரத்தில் தொழிலாளர்கள் அங்கிருந்தால், அவர்கள் உயிரை இழக்க வேண்டியதுதான்.
இதை (AIR BLAST ) என்று சொல்வார்கள்.
ஒரு நாளைக்கு குறைந்தது அய்ந்து முறையாவது, இந்த வெடிச் சத்தத்தோடு நில அதிர்வும் உணரப்படும்.
....மீண்டும் வரும்.....
சாம்பியன் ரீப் மைன்ஸ் 1885 -ம் ஆண்டில், ஜான் டைலர் & கம்பெனி யால் தங்கவயலில் சுரங்கம் தோண்டும் பணி தொடங்கப் பட்டது. சுரங்கப் பணிக்காக பணியாளர்களை, தமிழ்நாட்டின் வட ஆர்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர்களை பெருமளவில் அழைத்து வந்தனர். அதாவது 90 விழுக்காடு தமிழர்களே.! அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே!!
துவக்ககாலத்தில் சுரங்கத்த் தொழிலாளர்கள் பட்ட துன்பங்கள் சொல்லவொண்ணாது. வாரத்தில் திங்களன்று சுரங்கத்துள் இறங்கினால், சனிக்கிழமை மாலைதான் வெளியில் வருவார்கள். அதற்கு ஒரு பழமொழியும் சொல்வார்கள். உள்ளே போனால் பிணம். வெளியே வந்தால் பணம்" என்று. அது முழுக்க முழுக்க உண்மையே.
தங்கத்தை எடுப்பதற்காக, பாறையில் துளையிட்டு, வெடிமருந்தை நிரப்பி, வெடிக்க வைப்பார்கள். அப்போதெல்லாம் வெடிமருந்து பூசப்பட்ட சணல் கயிறுதான் திரியாக பயன்படுத்தப்பட்டது. திரியை கொளுத்திவிட்டு உடனே தூரத்துக்கு செல்லவேண்டும்.ஆனால் சுரங்கத்துக்குள் அப்படியெல்லாம் உடனே வேறிடத்துக்கு மாறி சென்றுவிடமுடியாது. வெடிப்பதற்குள் வேறிடம் செல்லவில்லை என்றால், அவர்களும் வெடியில் சிக்கி உயிரழக்க வேண்டியதுதான்.
வெடி வைத்து முடிந்த பின்னால் , பாறைகளின் இடுக்கில் காற்று புகுந்து கொண்டுவிடும். அது வெப்பமடைந்து, ஒரு கட்டத்தில் வெடித்துச் சிதறிவிடும். அந்த நேரத்தில் தொழிலாளர்கள் அங்கிருந்தால், அவர்கள் உயிரை இழக்க வேண்டியதுதான்.
இதை (AIR BLAST ) என்று சொல்வார்கள்.
ஒரு நாளைக்கு குறைந்தது அய்ந்து முறையாவது, இந்த வெடிச் சத்தத்தோடு நில அதிர்வும் உணரப்படும்.
....மீண்டும் வரும்.....
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
