இது தமிழனின் பொதுநல நோக்கத்தால், மக்களுக்கு நன்மை செய்யும் பொருட்டு தோன்றிய விழா.
(நளி)கார்த்திகை மாதத்தில் இருள் அதிகமாக இருக்கும். வழிப்போக்கர்களுக்காகவும், ஊர்மக்கள் வெளியில் நடமாட ஏதுவாக இருக்கட்டும் என்று, வெளி வாயிலில் விளக்கேற்றி. நாளடைவில் விளக்கு வைப்பதை சற்று அழகுபடுத்தி வரிசையாக வைக்கத்தொடங்கினர். இதுவே பின்னாளில் மாற்றுக்கதைகள் சொல்லப்பட்டு, வேறு விழாக்களாக மாற்றப்பட்டுவிட்டன என்பது எனது கருத்து.#
#
தமிழன் பகலவனைத்தான் முதல் இறைவனாக வணங்கினான். பூமியின் இயக்கமும், அனைத்து உயிர்களின் தோற்றமும் பகலவனாலன்றி வேறில்லை எனத் தமிழன் அறிந்திருந்தான். "பூமியிலே மாரியெல்லாம் சூரியனாலே, பயிர் பூப்பதுவும் காய்ப்பதுவும் மாரியினாலே" என்பதை முழுதாக
அற...ிந்திருந்தான். வள்ளுவனும் இதனை "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பக(ல)வன் முதற்றே உலகு" என்று பகலவனை முன்னிறுத்தியே பாடினார். அதற்கு வேறு கதைகளை திரித்துக் கூறினர், ஆரியர்.#
அந்தப் பகலவன், தென் திசையிலிருந்து வடக்கு நோக்கி நகரும் நாளையே, தமிழன், தனது புத்தாண்டாகக்கொண்டான். இதில் போகி பண்டிகையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர் ஆரியர். அதாவது தமிழர் எழுதிய பாடல்கள், வரலாற்று ஆவணங்கள் அனைத்தையும் எரித்தால், அல்லது ஓடும் நீரில் போட்டால் உங்களுககு மோட்சம் கிடைக்கும் என்று கூறி தமிழனின் வரலாற்றை திட்டமிட்டு அழித்தனர், ஆரியர்.
#எப்படியாயினும் சுறவம்(தை) முதல் நாளே தமிழனின் புத்தாண்டு. அதுவே எந்த அருவருப்பான ஆரியக்கதைகளும் இல்லாத, முழுக்க முழுக்க அறிவியல் தன்மையோடு கூடிய, உழைப்பையே பெரிதும் போற்றக்கூடிய பொங்கல் தான் தமிழனின் ஒரே திருவிழாவாக இருக்கமுடியும். இருக்கவேண்டும். செந்தமிழே வெல்லும்...!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக