வெள்ளி, 19 நவம்பர், 2010

தேன் தமிழ்மொழி.

 தித்திக்கும் தேன்தமிழை செத்தமொழி சிதைத்திடுமா?
எத்திக்கும் எம்தமிழே நிலைத்திடுமா? - இத்தரையில்
எந்தமிழர் "தமிங்கிலிசு" தவிர்த்தாலே என்றென்றும்
செந்தமிழ் தான் வென்றிடுமே!             
                                                                                       -இராசசேகரன்...


இருப்பாய் தமிழா நெருப்பாய்!
இருந்தது போதும் இதுவரை செருப்பாய்!
இருப்பாய் தமிழா நெருப்பாய்!

குட்டக் குட்ட நீ குனிந்தால் உலகத்தில்
...குட்டிக் கொண்டேதானிருப்பான் - முரசு
கொட்டி எழடா உன் பகைவன் பிடரியில்
குதிகால் பட ஓடிப் பறப்பான்!

கைவிலங்கு நீ சுமந்தாய் இதற்கோடா
கருவில் உன்னைத் தாய் சுமந்தாள்! - இனப்போர்
செய்யக் களம்வாடா கொடுமை தூள்படும்
சிறுத்தை உன் கண்கள் சிவந்தால்!

வெல்லமோடா உயிர் உனக்கு? - புவிகாண
வீறுகொண்டு போர் இடடா! - தமிழர்
உள்ளம் மகிழ நீ களத்தில் நடடா
உயிரையும் தூக்கிக் கொடடா!

வஞ்சினம் முழக்கி எழடா! மானத்தின்
வல்லமை உன் பகை உடைக்கும்! - அட
நெஞ்சில் தமிழ்வீரம் பொங்க நில்லடா!
நிமிர்ந்த வரலாறு கிடைக்கும்!
- காசி ஆனந்தன்

    *
      Thiru Valavan
      வானுயர வளம்பெருக ஓங்கிப் புகழோச்சியவன்
      தேனினிய தெள்ளுமொழி செந்தமிழைப் பேசியவன்
      ஏட்டினில் பிறமொழியை எழுதி வைத்துப் பழக்குவதா?
      பேச்சினில் பிறமொழியைக் கலந்துதமிழ் கொல்லுவதா? (வானுயர )

      ...முத்தமிழ் வாழும் மொழி வடமொழி செத்தமொழி
      உலகினில் பேசுமொழி தமிழ்மொழி மூத்தமொழி
      கண்ணெனப் போற்று பொன்னல்லவோ கூறு
      கலப்பினைச் செய்யும் அழிப்பாரை ஓட்டு
      பாவாணர் சொன்னாரப்பா..... ஒட்டுண்ணி நமக்குத் சங்கதந்தான்

      செந்தமிழ் வாழ்வதும் மண்ணிதில் தாழ்வதும்
      சொந்த இனத்தினர் கையினில்தான் (வானுயர )

      கன்னடமும் களிதெலுங்கும் பிறந்ததும் எதனாலே ?
      இன்னமும் ஆங்கிலத்தைக் கலப்பதும் எதனாலே?
      மண்ணாகிப் போகும் பண்பாடும் சாகும்
      பொன்னான உன்றன் இனமாறிப் போகும்
      தப்பினைச் செய்யாதப்பா ... ஞாலத்தில் அழிந்து போவாயப்பா..

      ஆருயிர் என்பதும் ஆருடல் என்பதும்
      மண்ணில் தமிழுந்தன் அன்னையப்பா (வானுயர )

      நலம் பெற வாழ்க தமிழினமே - இந்த
      ஞாலத்தில் தனி நாட்டைச் சமைத்தே ...

      இரா.திருமாவளவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக