Rajasekaran Seetharaman
காவிரியே காஞ்சுபோயி
கால்வாயா மாறிப் போச்சு,
வைகையும் வத்திப்போயி
வரிக்கோடா மாறிப் போச்சு
ஏரியையும் கூறு போட்டு
...ஏலத்துல வித்தாச்சு,
வயலெல்லாம் வறண்டுபோயி
வீட்டு மனையா பிரிஞ்சு போச்சு
பண்ணையார் வயலில் நாத்து நட
"பாரின்" மெஷின் வந்தாச்சு
கொஞ்ச நஞ்சம் தெரிஞ்சவங்களுக்கு
நாத்து நட வயலே இல்லை..
வெள்ளைக்காரி நாத்து நட
கத்துக்க மட்டும் வயலுண்டு..ஹ்ம்ம்
எங்க வீட்டுப் பெண்டுகளை
குற்றம் சொல்லி என்ன பயன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக